இனத்தைக் கடந்து மொழியைக் கடந்து வாழ்க்கையின் உயிர் நூலினை பிடித்து சொல் பூக்களால் மாலையாக்கி மனம்விசி நெகிழச் செய்த சுகுமாரனுக்கு வாழ்த்துக்கள் நெஞ்சில் இருந்து . மலையாளியான பாபு ராஜ் தமிழனுக்கு ஒன்றும் சொல்லிவிடவில்லை. ஆனால் மனிதனாகிய பாபு ராஜ் தமிழ்னாகிய மனிதனுக்கு சொல்லிச்சென்றது கடலினும் பெரியது; வானினும் உயர்ந்தது; நிலத்தினும் வலியது. சுகுமாரன் தீட்டிய பாபு ராஜ் ஓவியம் போராடுகிறது; அழுகிறது; சுவைக்கிறது; உவகைக் கொள்கிறது; மௌனமாகிறது நம்மையும் மௌனமாக்குகிறது.
கடலே ........ நிலக் கடலே
சுகுமாரன் . உயிர்மை ஜுலை 08
Tuesday 22 July, 2008
Tuesday 8 July, 2008
முதல் கனவு
என் முதல் கனவு
எனக்கு இல்லை நினைவு
தூங்கும் குழந்தை ஒன்று
தூக்கத்தில் சிரிக்கவும்
அம்மாவோ பாட்டியோ
சொன்ன விளக்கம் அன்று;
கனவில் சாமி தோன்றி
குழந்தையுடன் விளையாட
குழந்தை சிரிக்கிறது.
நானும் சிரித்திருப்பேனே
சாமியைக் கண்டேனா?
என் முதல் கனவு
எனக்கு இல்லையே நினைவு
ஒலிபெருக்கி
இசை அலறும்
எரிமலை வாய்;
சொல் நொறுங்கும்
கல் ரோலர்;
சாவு எரிக்கும்
கொல்லுலைக் கோல்
Saturday 5 July, 2008
சி.சு.செல்லப்பாவின் கவிதைகள்
என்று வருவானோ
பாடாத பாட்டாக
மவுனத்துள் கம்முகிறேன்
பேசாத சொல்லாகி
சுவடிக்குள் நொறுங்குகிறேன்
உணராத பொருளாகி
சொல்லுக்குள் புழுங்குகிறேன்
ஆளாத பாண்டமாக
சேந்தியிலே மழுங்குகிறேன்.
காமிரா
போட்டோ எடுக்கையி்ல்
என்னையே பார்த்தார்கள்
போட்டோவை காட்டுகையில்
தன்னையே பார்த்தார்கள் .
பாடாத பாட்டாக
மவுனத்துள் கம்முகிறேன்
பேசாத சொல்லாகி
சுவடிக்குள் நொறுங்குகிறேன்
உணராத பொருளாகி
சொல்லுக்குள் புழுங்குகிறேன்
ஆளாத பாண்டமாக
சேந்தியிலே மழுங்குகிறேன்.
காமிரா
போட்டோ எடுக்கையி்ல்
என்னையே பார்த்தார்கள்
போட்டோவை காட்டுகையில்
தன்னையே பார்த்தார்கள் .
Friday 4 July, 2008
சி.சு.செல்லப்பா - பிரமாண்டமும் ஒச்சமும்
சிறுகதை தொகுப்புகள் :
- சரசாவின் பொம்மை 1942
- மணல் விடு 1945
- அறுபது 1962
- சத்யாகிரகி 1964
- வெள்ளை 1967
- அழகு மயக்கம்
- எல்லாம் தெரியும் 1977
- நீர்க்குமிழி 1977
- பழக்க வாசனை 1977
- கைதியின் கர்வம் 1977
- செய்த கணக்கு 1977
- பந்தயம் 1977
- ஒரு பழம்
கவிதை தொகுப்பு :
- மாற்று இதயம் 1974
- நீ இன்று இருந்தால் 1974
கட்டுரை தொகுப்புகள்
- இலக்கிய சுவை
- குறித்த நேரத்தில்
- ஏரிக்கரை
- காற்று உள்ளபோதே
- படைப்பிலக்கியம்
- மாயத்தச்சன்
- ஊதுவத்திப்புல்
- தமிழில் சிறுகதை பிறக்கிறது
- சிறுகதை முன்னோடிகள்
- இலக்கிய விமர்சனம்
- எனது சிறுகதை பாணி
- பி.எஸ்.ராமய்யா சிறுகதை பாணி
- மணிக்கொடி சிறுகதை முதல்வர்கள்
நாவல்கள் :
- வாடிவாசல்
- ஜிவனாம்சம்
- சுதந்திர தாகம் - மூன்று தொகுப்புகள்
நாடகம் :
- முறைப்பெண்
எழுத்து பிரசுரமாக வெளிட்ட பிறர் நூல்கள்
- புதுக்குரல்கள்
- காட்டு வாத்து
- வழித் துணை
- கோடை வயல்
- அந்தி
- அமர வேதனை
- பசப்பல்
- ஷண்முக சுப்பையா கவிதைகள்
- நீலபத்மனாபன் கவிதைகள்
- பிச்சமூர்த்தி கவிதைகள்
- புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
Subscribe to:
Posts (Atom)